Sunday 3 November 2013

என் மனப் புத்தன்.



என் மனப் புத்தன் மீது
கற்களினால்.....
அடிபட்ட காயங்கள்
இதயம் விம்மி
அழுது விளக்கம்
அளித்தது .. நீ
ஞாபகத்தில் வைத்திருந்த
அவள் வார்த்தைகள்தான்
காரணம் என்று......
கண்ணீர் தேசம் 

                         
                               
  
நினைத்து நினைத்து
தினமொரு காலமும்
முயற்சியால்
தன்னைத் தேய்க்கிறான்.

விதி வானம் கட்டிய
சலங்கை கொண்டு
அவன் வாழ்வினிலே
மோதுகிறது.........


அவன் தன்மனம்
திரட்டமுன்னம் கலைக்குள்
தன்னைத் திணிக்கிறான்

சுற்றமெல்லாம்
தடுத்து நோந்த போதும்
அவனை முயற்சியின்
சத்தம் இன்னும்
விடவில்லை..........


அவன் தேசமெல்லாம்
கண்ணீரானது
அவன் வாசமெல்லாம்
முயற்சி பற்றியே வீசுகிறது...



No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.