Friday 30 May 2014





உன்னை நட்சத்திர துகள்கொண்டு
யாத்திருக்க வேண்டும் இறைவன்
அல்லது உன்னை நேசிக்கும்
என் மனம் எப்படிப் பிரகாசிக்கிறது
இவ்வளவு ஒளியுடன்....
.............................................................
தொலைவில் கேட்கும் பாடல்
கடந்தும் மறக்கப்படாத
உன் காதலியின் இரசநிழல்........


.............................................................


விடைகள்
தன்னைக் கூறமுடியாத
வினாக்களை நம் ஒவ்வொருவருக்காகவும்
சொல்லிக்கொடுக்கிறது
நம் வாழ்வுப் பாதையில்.......


.................................................
என் வயதுச் செடியில்
பூக்கிறது
பறந்து திரியும்
அவள் மனத்தேனிக்கள்...