Thursday 17 October 2013

திரும்பி நீ பார்க்காதே



நெருங்குதல் போலே
விலகும் காதல்
நெருங்கத் தொடங்கி அடுத்து
விலகவும் செய்யும்......
மனதின் வேலை
அடுத்தது செய்வதே...........

...........................................

2

வேண்டுமென்று எதையாவது

விட்டுச்செல்லுங்கள்

அடுத்த பிறவிக்கல்ல

.............................................

இங்கு வாழும் மனிதம்

வரலாற்றில் உன்னை

வேணாமென்பதற்காய்

...........................................


3
திரும்பி நீ பார்க்காதே


நெடுங்காலப் பிரிவினையால்
என் மனமந்தரமாக்கினாய்
நட்சத்திரங்களிலும் தேடிப்பார்த்தேன்
உன் தொலைந்த முகவரியை

உன் மெல்லிய
சலனத்தை கொஞ்சம் நிறுத்து
என் அழுகின்ற மனதை
அன்பால் சொல்ல வேண்டும்

உன் வார்த்தைகளை
முத்தங்களாய்ப் பிரவாகிக்கும்
கற்பனைகள் இன்னமும்
வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.

என்னை மீண்டும் தரமறுக்கிறாய்
சந்தேகம் கொள்கிறது நம்காதல்
நான் உன்னிடம்தானா என்னை
இழந்தேனென்று...

மறந்து போகாதே
உன் தலையணையைக்கூட
எனக்குப் பரிசளித்தாய்
அகன்று விரிந்த உன் மனவானமாய்
எண்ணிஅதிலேதான்
உறங்குகிறேன்........


போகும் தெருக்களின்
வளியே நானும் வருவதானால்
திரும்பி நீ பார்க்காதே
மீண்டுமொரு
கற்பனை துளிர்விடுவதற்கு
என் மனம் ஒரு
போதும் ஏற்றுக்கெள்ளாது

உன்கணில் எனை வைத்து

நீர்த்தெடுத்த சிவந்தமண்ணால் உனை
சேர்த்துக் குழைத்திருக்கிறானிறைவன்.
வார்த்தெடுத்த வகுடுமுதல் நகம்வரை
நாலா பக்கமும் ஒளிஉருகும் வதனம்

வெள்ளிகள் பிரசவித்த உன் இதயம்
பின் என்ன பிடரிவழி துளைத்தாலும்
பிய்த்தென்னைக்கொய்யாதோ.

நெறிபிறழாத உன்கணில் எனை வைத்து
அரசியல் சூழ்ச்சி செய்கிறாய். நான்
சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்என் ஈழ அகதிகளாய்

உதிர்த்து நீ விரித்துவைத்த தேகமெல்லாம்
மல்லாக்கத் திரிகிறது என் மோகமெல்லாம்

உதடுவழி ஒருசொட்டுச் சிந்தாது கன்னக்
கனிமமெல்லாம் உறுஞ்சுகிறாய் மௌனமாய் நீ

எத்தி எத்தித் திணறிக்கொண்டு விக்கிநான்
போகிறேன் முடிவுஅறியா மூச்சுக் களைப்பால்.

விழித்து நீ இன்னமும் பார்க்கவில்லை..
சலித்துக்கூட இன்னும் போகவில்லையே.நான்



நீதானே .......


நீதானே
விடுதலை அறியாத
தருணங்களை என்
இதயத்திறகுக் கற்பித்தாய்....

நீதானே
முழுமையடையாத
காதலை என்
உணர்வுக்குள்
விசிறினாய்...............................

நீதானே
அலைந்து திரியாத
என்னுணர்வுக்குள்
வாழ்வதாய் நினைக்கும்
காதலைக் கரைத்தாய்.................

நீதானே
என் முன்னால்
செல்லும் பாதையைக்கூட
கற்பனையால்
இரசிக்கவைத்தாய்.....................

நீதானே
போதுமெனக்கூறித்திரிந்த
என் அறிவை தேடலுக்குள்
தொலைத்தாய்...................................

நீதானே
என் மூச்சுக்காற்றை
ஏழனம் செய்துவிட்டு
என்மூச்சுக்குழாயினுள்
விண்சாரலை நிரப்பினாய்...........


நீதானே
நானாகும்
தருணங்களையும் நீயாகும்
தருணங்களையும்
மறைத்தாய்......

நீதானே
எனக்குள் யாருமே
உணராத ஒன்றைப்
புகுத்தினாய்.....


இப்போதுபார் உன்
திருமணப்பத்திரிக்கையின்
முன் நான்மட்டும்
மண்டியிட்டுக்கிடப்பதை.....