Thursday 17 October 2013

திரும்பி நீ பார்க்காதே



நெருங்குதல் போலே
விலகும் காதல்
நெருங்கத் தொடங்கி அடுத்து
விலகவும் செய்யும்......
மனதின் வேலை
அடுத்தது செய்வதே...........

...........................................

2

வேண்டுமென்று எதையாவது

விட்டுச்செல்லுங்கள்

அடுத்த பிறவிக்கல்ல

.............................................

இங்கு வாழும் மனிதம்

வரலாற்றில் உன்னை

வேணாமென்பதற்காய்

...........................................


3
திரும்பி நீ பார்க்காதே


நெடுங்காலப் பிரிவினையால்
என் மனமந்தரமாக்கினாய்
நட்சத்திரங்களிலும் தேடிப்பார்த்தேன்
உன் தொலைந்த முகவரியை

உன் மெல்லிய
சலனத்தை கொஞ்சம் நிறுத்து
என் அழுகின்ற மனதை
அன்பால் சொல்ல வேண்டும்

உன் வார்த்தைகளை
முத்தங்களாய்ப் பிரவாகிக்கும்
கற்பனைகள் இன்னமும்
வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.

என்னை மீண்டும் தரமறுக்கிறாய்
சந்தேகம் கொள்கிறது நம்காதல்
நான் உன்னிடம்தானா என்னை
இழந்தேனென்று...

மறந்து போகாதே
உன் தலையணையைக்கூட
எனக்குப் பரிசளித்தாய்
அகன்று விரிந்த உன் மனவானமாய்
எண்ணிஅதிலேதான்
உறங்குகிறேன்........


போகும் தெருக்களின்
வளியே நானும் வருவதானால்
திரும்பி நீ பார்க்காதே
மீண்டுமொரு
கற்பனை துளிர்விடுவதற்கு
என் மனம் ஒரு
போதும் ஏற்றுக்கெள்ளாது

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.