சேர்த்துக் குழைத்திருக்கிறானிறைவன்.
வார்த்தெடுத்த வகுடுமுதல் நகம்வரை
நாலா பக்கமும் ஒளிஉருகும் வதனம்
வெள்ளிகள் பிரசவித்த உன் இதயம்
பின் என்ன பிடரிவழி துளைத்தாலும்
பிய்த்தென்னைக்கொய்யாதோ.
நெறிபிறழாத உன்கணில் எனை வைத்து
அரசியல் சூழ்ச்சி செய்கிறாய். நான்
சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்என் ஈழ அகதிகளாய்
உதிர்த்து நீ விரித்துவைத்த தேகமெல்லாம்
மல்லாக்கத் திரிகிறது என் மோகமெல்லாம்
உதடுவழி ஒருசொட்டுச் சிந்தாது கன்னக்
கனிமமெல்லாம் உறுஞ்சுகிறாய் மௌனமாய் நீ
எத்தி எத்தித் திணறிக்கொண்டு விக்கிநான்
போகிறேன் முடிவுஅறியா மூச்சுக் களைப்பால்.
விழித்து நீ இன்னமும் பார்க்கவில்லை..
சலித்துக்கூட இன்னும் போகவில்லையே.நான்
நீதானே .......
நீதானே
விடுதலை அறியாத
தருணங்களை என்
இதயத்திறகுக் கற்பித்தாய்....
நீதானே
முழுமையடையாத
காதலை என்
உணர்வுக்குள்
விசிறினாய்...............................
நீதானே
அலைந்து திரியாத
என்னுணர்வுக்குள்
வாழ்வதாய் நினைக்கும்
காதலைக் கரைத்தாய்.................
நீதானே
என் முன்னால்
செல்லும் பாதையைக்கூட
கற்பனையால்
இரசிக்கவைத்தாய்.....................
நீதானே
போதுமெனக்கூறித்திரிந்த
என் அறிவை தேடலுக்குள்
தொலைத்தாய்...................................
நீதானே
என் மூச்சுக்காற்றை
ஏழனம் செய்துவிட்டு
என்மூச்சுக்குழாயினுள்
விண்சாரலை நிரப்பினாய்...........
நீதானே
நானாகும்
தருணங்களையும் நீயாகும்
தருணங்களையும்
மறைத்தாய்......
நீதானே
எனக்குள் யாருமே
உணராத ஒன்றைப்
புகுத்தினாய்.....
இப்போதுபார் உன்
திருமணப்பத்திரிக்கையின்
முன் நான்மட்டும்
மண்டியிட்டுக்கிடப்பதை.....
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.