Friday 31 January 2014


ஒரே தட்டில் உணவு
உட்கொண்டு எழுந்திருக்கிறாள்...
கைகளின் பிசையல் தன்மையுடன்
இருந்துகொண்டிருக்கிறேன்..நான் மட்டும்..
இப்படியே என் நாற்காலியும் நடுவிலிருந்து
சொட்டும் அவள் தட்டும் உரசிச் செல்லுகிறது..
தொடர்கிறது இனி அவளுக்குமெனக்கும்
இனம் புரியாத ஊடல்
நான் ..........
இனி அங்கு செல்வதிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறேன்
இன்று அதே இடத்தில்

இன்னோர் ஊடல் கனதியாய் மோதுகிறதை காண்கிறேன்...
இவ்வாறே என்னிலிருந்தல்ல
யாரோ ஒருவரிலிருந்து கண்டுகொள்ளப்பட்டல்ல
தானாய் உருவாகித் திளைக்கிறது..
உலக முடிவுவரை.......
இது தொடர்ந்து கொண்டே இருக்கும்..




என்னையும் உலகையும்



மேகமிற்ற உலகிலே என்
தாவும் தன்மையின் தேடலை என்செய்ய
புதிய தேடலாய் மாற முன்னம்
மீண'டும் பழைய கால
இதிகாசம் மனனம் செய்ய கட்டாயப்
படுத்துகிறது........

தேடுவதன் தன்மையற்று இன்னும் எவ்வளவு
காலம் தொலைந்து கொண்டிருப்பேன்
இருளுக்குள் முளைக்கும்
என் சிறகுகள் யாருக்கும் தெரியவில்லை
எனது வானத்தையும் யாரும் காணவில்லை..

போதுமென்று ஒதுக்கியதைவிட தேவையற்றது
அல்லது முடியாது என்று ஒதுக்குவது
கனத்த சிகரங்களாய் ஏறி நிற்கிறது..

ஒற்றைககாலில் புரியாத தேடலுக்காய் சிவனைப்போல்
யாசகம் செய்கிறேன்
என்னைவிட்டு மனம் மட்டும் புத்தனைப் போல்
தொலைந்து மௌனமாகிறது மனது....

Tuesday 28 January 2014

நீ யார் என்ககேட்டு


நீ யார் என்ககேட்டு அழ
பக்கத்தில் உன்
இறப்புக்கான காரணத்தை
வைத்துவிட்டு அப்போது
பிரியும் உன் உயிரற்ற உடலுக்குக் கூட

நீ சொந்தமற்றவனென்று..



கண்ணாடித் தெருக்களில்தான் எம்பயணம்
சற்று சறுகினாலோ அலங்கோலமாகலாம்
அல்லது நீ உடைந்து போகலாம்..
ஏனெனில் நமக்குப் புரிவதில்லை
சுற்றிவர கண்ணாடியாலான உலகம்
ஆக்கப்பட்டிருக்கிறது
கடினமாகப் பார்க்காதே
மென்மையாகப் பார்...

பார்த்தலின் தன்மையிலும் உன் உலகம் உடைந்து

நீ எண்ணங்களால் புதிதாய் ஒன்று
உருவாக்கி வாழ்ந்து கொண்டிருப்பாய்
நிச்சயம் உன்னை அது கரை சேர்க்க
கடினப்படும் ...
ஏனெனில் விதிக்கப்படுவது
கடினாமாய் இருக்கும் விரும்பிக்கிடைப்பதே
இலகு..

எவ்வளலுவு காலம்
உன்மனப்பாயில் எவ்வளவுகாலம்
உருண்டு புரண்டு செல்கின்றனர் யாரையுமே
கண்டு கொள்வதில்லை
காரணம் ஒன்றுமே இல்லை விதிக்கப்பட்டதல்ல
அது பழக்கப்பட்டது அதுதான்
இன்னும் கடினமாய் இருக்கிறது

என் மனவிம்பங்கள்



மனது எங்கே போகிறது எனக் கேட்கின்றனர்
.
நினைவுகள் யாவும் 
செயல்களேதும் இல்லாமல்
மனமாக தொனிக்கிறது

..Where mind is going to ask me
. Memories are not practicing
The heart sounds


எல்லாத் தீமைகளிலிருந்தும் விலகி
நீ போனால் உன் நன்மைக்கான
புரிதலும் உன்னைவிட்டு விலகிவிடும்........

Away from all evils
If you are for your benefit
Understanding and whittle away ........


எல்லா பொழுதுகளையும்
குற்றமில்லாத பொழுதாய் மாற்றினால்
ஒரு பொழுதுகூட மகிழ்ச்சியாய் இராது .

All during the
If you change fault polutay
will not change a happy period of...


உன்னை நிறுத்தும் ஒரு நொடி மாறினால் அது
மகிழ்ச்சி அடையும் தன்மை ஆகிறது
அது உலகத்தில் காதலாய்த் தானிருக்கும்
அதற்கு அவ்வளவு சக்தி உண்டு.


If yourself stop for a moment then it changes
Of happiness is reaching
It's love in the world
It has so much energy



எனக்குள்ளே என்னேரமும்
அடைபட்டுக்கிடக்கிறேன்
உன் பார்வை விடுவிப்புக்கள்
எனக்குக் கிடைக்காதா என்று

Within me all the time
Confined
Your sight the
I could Will not



எங்கே வீட்டுக்கும் தேடலில்லாமல்
மறைகிறது மனம் இதுவென்ன
என் உணர்வுக்குள் புதினம்
கலகமே கொன்று தின்று போகிறது..........
காதலெனக்கூறிவிடலாமா?...............


Where is the house without a search
What it hides inside the mind
My heart's New
Riot is going to kill and eat ..........
Love it