அந்த இருளுக்குள் பேசத்தெரியாத பல மௌனங்கள்
அடைபட்டுக்கிடக்கிறது..
இருளினிடத்து
இரயில் பயணங்களாய் அவள் பார்வைகள்
எதிரே நகர்ந்து செல்கிறது ...
பார்க்க முடியாத படிக்கு...
செல்லிடத்தோணிகள் கூட
மூழ்கிக் கொண்டிருக்கிறது
அந்த அலைகளுக்கான காரணங்களுக்காக..
நான் செய்திகளை கூட அலைகளின் மூலமே அனுப்புகிறேன்
அதுதான் இலகுவில் மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறேன்..
ஏனெனில் என் தொடர்புகள் யாவும் அவளுக்கு அலைகளின்
மூலமான் அழகிய மூங்கில் குழலிசையே..
அதுதான் அவள இன்னமும் உணரமுடியாமலும்
மொழிபெயர்க்கமுடியாமலும் ....