Friday 28 February 2014

என் நெடித்துப்போன பாதையின்
கீறல்களைவிட
முகாரியான என் எண்ணம்
கிழிக்கின்ற கவிதைகளைவிட

Thursday 27 February 2014

இரகசியம்




இது நீந்த முடியாத கரையென்றால்

நாம் இதற்குள் இறங்கியிருக்கமாட்டோம்

நம்பிக்கை யாருக்கோ 

இருந்திருக்கும் நாம் கரைகாண்போமென்று.

இப்போது புரிகிறதா கரைகளற்ற 

ஒன்றில் நாம் நீந்துவதும் மிதப்பதும்

அமிழ்வதுமாய் பயணிக்கிறோம்

யாரிடமும் சொல்ல முடியாது 

இவர்கள் 

இதை குளம் எனவும் சிறு கிணறு போலவும் நினைத்திருக்கலாம்

யாரிடமும் சொல்லாதே 

உன் முடிவில்லா 

இந்தப் பயணிப்பு நீ 

முடிந்துபோனாலும் கரைதெரியாமலே 

இறக்க நேரிடுமென்று