Thursday 20 March 2014

கல் வாழ்




உன் மனம் கல் வாழ்
போன காலங்களெல்லாம்
வெறும் வாழாய் எனைக்
கீறிக் கிழித்துக்கொண்டிருந்ததில்
மகிழ்ந்திருந்தேன்........ இன்று


என் உண்மைச் 
சாயல் காலகதியில்
மூழ்கடிக்கப்பட்டுவிடும்.........

அது போகும் பாதை 
எல்லோரையும் அலக்கழிக்கிறது

வீணான விவாதங்கள்
சிரிக்கிறது ...  என் மனித நேயத்தைப்
பார்த்து தம்மை  அடைக்கலப்படுத்திவிட்டேனென்று.

என்னையும் சேர்த்து 
அந்த விவாதங்கள்  கொண்டுசென்று ..
மோகம் தனைத்துறந்ததாய்
சொல்லும் கானலுக்குள் அடைத்துவிடும்...

இவ்வளவும் கற்பப் பைக்குள் 
திணித்திருக்கிறார்கள் 

என்னை இறுதியில் பாவங்களுடன்
அனுப்புவிடும் இந்த மனித குலம்...

Tuesday 18 March 2014

தூலப்பொருள்



தூலப்பொருளாயும் தொலைத்த
பொருளாயும் ......
காலப் பெருவெளியாகவும்
கனிந்து எனைமேவும் இரவாகவும்
........................
தீக்கிடை சேரும் மனதை
நீ பூக்கடையாக்கினாய்......
நீ விழிகளற்ற தரிசனம் போலே
தினம் சேரும் வளிதெரியாமல்
தவிக்கிறேன்....

போ நீ..எல்லைகளற்று ஏதோ ஓர் முடிவில்
என்னுணர்வு உன்னைத் தீண்டும் தன்மையாகி
உன்னைத் தேடி வரும்

........................................
நிகழ் காலப்புன்னகையை
உண்மையென்று நம்பிக்கிடக்கும்
இதயத்திற்கு எப்படி விபரிப்பேன்
காலமே இல்லாமையிலிருந்து
தோன்றுகிறதென்று......