காயத்தினாலே
மனதிலிருந்து விலகிச்செல்பவைகளை
மனிதர்களால் விடமுடியாதென்பதை
காதல்எப்படியோ அறிந்திருக்கிறது....
பெண்களில்/
காயத்தினாலே சுகிப்பு...
காயமற்ற சுகிப்பு........
இதில் ஏதாவதொன்றில்
ஆண்கள் உயிருடன் எரிதலே நியதி...
கலங்கினும் .......நீ விழிநீர் சிந்தினும்
தாண்டிக்கொண்டேதானிருக்கும்
அடுத்த கட்டத்தை உன்வாழ்வு..............
உன் காதல் சிகிச்சைக்கு
அனேகமாய் என்னிதயத்தின்
குருதியே.. உறிஞ்சுகிறாய்...
குறைவாய் உண்மையை விழுங்குகிறார்கள் பெண்கள்
அதனால்தான் அதிகம்
பொய்களை
வெளியிடுகிறார்கள்...ஆண்களிடம்.....
கற்பனை வெளிகளில் சில மனிதர் கவிதை
நிரப்புகின்றனர்.அதிலே மனிதரில் சிலர்...
கவலை நிரப்புகின்றனர்.......