சகியே என் உயிரில்
மெல்ல நீ நிரம்பு....
சுகிக்கட்டும் மெலிதாய்
ஓடு என் நரம்பில்...............
என் உயிர் ஊனக்காற்று..
கரைந்து போகும்
மெல்ல நீ இதயம் உரசு......
என் உள்காற்றில்
மெல்லென நீ பேசு........
என் பிறப்பு
உறுதிகொள்ளட்டும்
உன் மிருதுவான சலனம்
நெஞ்சில் நிரப்பு......
இறந்துபோகுமளவுக்கு
வாழுமென் இதயத்தை
மேவு உன் கோபமற்ற
வார்த்தைகளால்.................
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.