உன் மனம் கல் வாழ்
போன காலங்களெல்லாம்
வெறும் வாழாய் எனைக்
கீறிக் கிழித்துக்கொண்டிருந்ததில்
மகிழ்ந்திருந்தேன்........ இன்று
என் உண்மைச்
சாயல் காலகதியில்
மூழ்கடிக்கப்பட்டுவிடும்.........
அது போகும் பாதை
எல்லோரையும் அலக்கழிக்கிறது
வீணான விவாதங்கள்
சிரிக்கிறது ... என் மனித நேயத்தைப்
பார்த்து தம்மை அடைக்கலப்படுத்திவிட்டேனென்று.
என்னையும் சேர்த்து
அந்த விவாதங்கள் கொண்டுசென்று ..
மோகம் தனைத்துறந்ததாய்
சொல்லும் கானலுக்குள் அடைத்துவிடும்...
இவ்வளவும் கற்பப் பைக்குள்
திணித்திருக்கிறார்கள்
என்னை இறுதியில் பாவங்களுடன்
அனுப்புவிடும் இந்த மனித குலம்...
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.