இது நீந்த முடியாத கரையென்றால்
நாம் இதற்குள் இறங்கியிருக்கமாட்டோம்
நம்பிக்கை யாருக்கோ
இருந்திருக்கும் நாம் கரைகாண்போமென்று.
இப்போது புரிகிறதா கரைகளற்ற
ஒன்றில் நாம் நீந்துவதும் மிதப்பதும்
அமிழ்வதுமாய் பயணிக்கிறோம்
யாரிடமும் சொல்ல முடியாது
இவர்கள்
இதை குளம் எனவும் சிறு கிணறு போலவும் நினைத்திருக்கலாம்
யாரிடமும் சொல்லாதே
உன் முடிவில்லா
இந்தப் பயணிப்பு நீ
முடிந்துபோனாலும் கரைதெரியாமலே
இறக்க நேரிடுமென்று
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.