Tuesday 28 January 2014

நீ யார் என்ககேட்டு


நீ யார் என்ககேட்டு அழ
பக்கத்தில் உன்
இறப்புக்கான காரணத்தை
வைத்துவிட்டு அப்போது
பிரியும் உன் உயிரற்ற உடலுக்குக் கூட

நீ சொந்தமற்றவனென்று..



கண்ணாடித் தெருக்களில்தான் எம்பயணம்
சற்று சறுகினாலோ அலங்கோலமாகலாம்
அல்லது நீ உடைந்து போகலாம்..
ஏனெனில் நமக்குப் புரிவதில்லை
சுற்றிவர கண்ணாடியாலான உலகம்
ஆக்கப்பட்டிருக்கிறது
கடினமாகப் பார்க்காதே
மென்மையாகப் பார்...

பார்த்தலின் தன்மையிலும் உன் உலகம் உடைந்து

நீ எண்ணங்களால் புதிதாய் ஒன்று
உருவாக்கி வாழ்ந்து கொண்டிருப்பாய்
நிச்சயம் உன்னை அது கரை சேர்க்க
கடினப்படும் ...
ஏனெனில் விதிக்கப்படுவது
கடினாமாய் இருக்கும் விரும்பிக்கிடைப்பதே
இலகு..

எவ்வளலுவு காலம்
உன்மனப்பாயில் எவ்வளவுகாலம்
உருண்டு புரண்டு செல்கின்றனர் யாரையுமே
கண்டு கொள்வதில்லை
காரணம் ஒன்றுமே இல்லை விதிக்கப்பட்டதல்ல
அது பழக்கப்பட்டது அதுதான்
இன்னும் கடினமாய் இருக்கிறது

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.