Thursday 31 October 2013

மௌன சோகம்






என் இதயத்தில்
புரளும் நீர்ப் பாம்புகளுக்கு..

எது தேவையென்று அலசுவதற்கு நேரம்
கொடு அது உன்மனதை இறுகச்சுற்றி
மீண்டும் மீண்டும் கொத்தத் துடிக்கும்......


நீ தவிடு பொடியாக்கிப் போன
என் நிமிடங்கள் புதுக்கவிஞன் வருகைபோல்
இன்றும் உணர்வுகள் புரியாது
தவிக்கிறது...........


உலகின் துன்பப் பாரத்தை சுமப்பதாய்
கனவுகாணுகிறது மனது
எங்கே போய் இறக்கி வைக்க
இம் மௌன சோகததை.....


கர்ப்பத்தின் பெருவலியை நான்
கனவுக்குள் சுமக்கிறேன்
எண்ணமெல்லாம் நீ நிறைந்ததனால்


புயல்கள்




கடலலைகள்
காற்றை முத்தமிடுகிறது
மிக ஆழமாக
சில வேளை
பிரசவித்துவிடுகிறது
பெரும் புயல்களை................
சில வேளை அதன் பிறப்பு
மானிடர் சிலரின்இறுதி
நாளாகிப்போகிறது......

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.