Thursday 7 November 2013

என்னில் நீ

உயிர் பிடித்து
நடக்கிறது..
உன் முழுமையடையாத
முத்தங்களினை.........

எவருனக்கு.
கற்பித்தார்
கோபங்களிலும்
மோகம் வளர்ப்பதற்கு...


என்னில் நீ
மூழ்கும் போது
மட்டும் உறவுகளின்
வதனம்
தெரிகிறது.......

தடவிநீ
துளிர்கொள்
மெல்ல என்
இதயத்தை..

பின்னலைத்
தேடுகிறேன்..
உடலினிலெல்லாம்
கடவுளின் கலகம்.

தொடப்படாமல்
முடிவுகள்
இருக்குமென்றால்...

அந்த வரிசையில் நானும்
நிற்பேன் வரிசையின்
முதல்நிலையில்

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.