Saturday 16 November 2013

வாழ்வின் சிந்தனை சுருக்கம்பற்றி


நாறாய்ச் சேறு பிழிவது 
அது ஒரு இறவாப் பிண்டம்
கனதியானதும் மெதுவாய்ப் படித்தாலும்
கண்களைத் தின்றும் 
சிலவேளை நசித்தும்
காரணங்களற்ற 
பார்வைகள் கொடுத்தும் ஆனால்
கருத்துக்கள் ஆழமானவையாகவும்
நிறுத்து!!! 
ஒருவனின் கேழ்வி இது.. 
சிந்திவிடாதிருக்கும் நனைந்து தொங்கும் ஒரு
ஈரமற்ற துணி போலா?
அது காயமற்று உயிரற்றிருக்கும் உடலா?
பதிலளிக்கிறான்.
இல்லை !!!!
வெறுமையுடன் செழிப்பாயிருக்கும்
இந்த வாழ்வுதான் அது.......

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.