அதோ மேகமாய் வரைந்து கிடந்த நீ கடந்து செல்கிறாய்
இன்னும் வரையப்படாத கோடுகளை
பொய் பிழைத்தால் சரியாகிவிடும்
எனக்குள்ளும் உனக்குள்ளும் முளைக்காது தவிக்கும் உணர்வு
நான் என்னைக் கடக்கயில் உனக்குள் விழுந்து விடுகிறேன்.
என் எல்லாப் பிழைகளுமே
உன் இதழ் ருசிகளைத்தான் ஞாபகப் படுத்துகிறது
நீ உன்னைக்கடந்து போவதாய்க் கூறு நீ எனக்குள் விழுந்து விடுவாய்
நிலவு வீசுமொலியில் விழுமுந்தன் நினைவுகள்
என் ஞாபகத்தில் நின்று சுவாசிக்கிறது..
விதைக்குளடைபட்டு முளைக்கிறேன் நான் மேலும் சுவாசிக்க முடியாமல்
உன்னைத் தெடிப் பறக்கிறது தானாய் என்மூச்சுக் கலங்களின் தேடல்கள்.
உன்னைத் தேடும் ஞாபகங்கள் என்னைத் தொலைத்த தொலைவுகளாய்;
தூரமாய் என் கனவுகளில் கைதாகிறது....
உன் வெறுப்பின் காரணங்கள் மேலேறி நடக்கிறது...
உன்னை விரும்பும் விருப்புக்கள்...
வீணாய் களிக்கும் காலங்கள் விதியில் பாவங்களாய் சேர்க்கப் படுவதுபோலே
பாரமாகிறது உன்னை நோக்கும் நேரங்கள் குற்ற உணர்வுகளுடன்
அதோ நீ மெகமாய் மாறிப் போனாய்
உன் மெல்லிய ஜீவித சலனத்தில் நானும் அடைபட்டு போகிறேன்
இது என் இரண்டாம் ஜனனமே நான் உன்னை நோக்கி நிலவாகித் தாவுவதால்...
உன் மெல்லிய ஜீவித சலனத்தில் நானும் அடைபட்டு போகிறேன்
இது என் இரண்டாம் ஜனனமே நான் உன்னை நோக்கி நிலவாகித் தாவுவதால்...
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.