Tuesday 19 November 2013
இதோ ஒரு புதிய மனிதன்
நியமில்லாது நிழலைத் தொடர்வது போல்
பறக்கிறது என்னில் மோதி ஒன்றுபார் அதையே நிறம்மாறி தொடர்கிறேன்.....
துரத்த முடியாமல் போகிறது நான் முன்னால் ஒடுவது போலே
ஆனால் அதன் பின்னாலே ஓடிக்கொண்டு....
மேன்மையென்று எண்ணுகிறது
தன்னை அறியாத ஒன்று
காரணங்கள் உணமையானதில்லை
தேடல்கள் பொய்முகவரிக்கு எதிராய் காலம் நகர்த்திய போதும்..
மனதின் எழுத்துக்களை படிக்கமுடியாத காகிதங்கள்
தன்னை தானே நிரப்பிக்கொண்டிருக்கிறது சில கிறுக்கல்களை வைத்து...
இதோ ஒரு புதிய மனிதன் அனைத்தையும் பின்தள்ளிய நினைவுகளிளை
மழுங்கடித்துச் செல்கிறான் வேறு புதிய தேடலுடன் பொய்யான காரணங்களுடன்....
Labels:
இதோ புதிய மனிதன்,
எழுத்துக்கள்,
கவிதைகள்,
காகிதங்கள்,
தேடல்,
நினைவுகள்,
பொய்மை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.