கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1]அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர்,கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.
அவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகிக்கின்றன. கலீல் ஜிப்ரான் எழுதிய புத்தகங்கள் ஓவ்வொரு மனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பவை.
தொழில் | கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி, இறையியல் |
---|---|
நாடு | லெபனானிய-அமெரிக்கன் |
இலக்கிய வகை | கவிதை, சிறுகதை |
இயக்கம் | மஹ்ஜர், நியூயார்க் பென் லீக் |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) | தி ப்ரோபட் |
கையொப்பம் |
நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.. "எப்படி இருக்கிறான் என் மகன்..??" அவள் சொன்னாள்.. "ரொம்ப நன்றாக இருக்கிறான்.. நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்.. இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான் இதுவரை கண்டதேயில்லை.." எனக்குக் கோபம் வந்தது.. நான் கத்தினேன்.. "அம்மா.. அது உண்மையில்லை.. என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது.. நான் குடித்த பால் கசப்பாக இருந்தது.. அவள் மார்பகங்களின் வாசம் கூட எனக்குப் பிடிக்கவேயில்லை.. நான் மகிழ்ச்சியாய் இல்லை.. மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!" ஆனால் என் அம்மாவுக்கோ, என் செவிலித்தாய்க்கோ நான் சொல்லியது எதுவும் புரியவில்லை.. ஏனென்றால் நான் பேசிய மொழி, நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது.. இந்தப் புதிய உலகத்தில் அந்த மொழியை யாருமே பேசுவதில்லை.. இருபத்தியோரு நாட்கள் கடந்ததும் எனக்குப் பெயர் சூட்டப்பட்டது.. பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி என் தாயிடம், "நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே.. ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.." என்றார்.. நான் ஆச்சர்யத்துடன் அவரிடம், "அப்படியென்றால் சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய் துக்கப்பட வேண்டுமே.. ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்.. ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை.. ஏழு மாதங்கள் ஆன பிறகு, ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்து என் தாயிடம், "உங்கள் மகன் ஒரு சிறந்த தலைவனாய் வருவான்.. அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்.. நான் கோபத்துடன், "தலைவனெல்லாம் க முடியாது.. நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்.. வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்.. ஆனால், அந்த வயதிலும் என் மொழி யாருக்கும் புரியவில்லை.. இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு என் அம்மா, செவிலித்தாய், பூசாரி எல்லோரும் இறந்து போய் விட்டனர்.. ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்.. ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்.. என்னோடு பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்னான்.. "நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று எனக்கு அப்போதே தெரியும்.. நீ குழந்தையாய் இருந்த போதே நான் கணித்துச் சொன்னேன்.." என்றான்.. நான் அவன் சொன்னதை நம்பினேன்.. ஏனென்றால், இப்போது என் பழைய மொழியை நானே மறந்து போயிருந்தேன்..!! ---- மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர் |
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.