Wednesday 5 March 2014

நிலைகாணாமல் தவிக்கிறது


ஒவ்வோர் முறையும் தடைகள் தாண்டி துடிக்கிறது ஏதோ ஒன்று தேடி 

நிலைகாணாமல் தவிக்கிறது

உள்ளே ஆழமாய்ச் சென்றாலும் மனக்

கோது மட்டும் நின்று ஊசலாடுகிறது

மனங்காணும் இந்த வாழ்க்கையின்

சிறு தேடல் பொய்யா

என ஊகம் கொள்ளும்

மனமும் பொய்யாகிப் புண்ணாகிறது....



இனியும் இரவுகள் ஏறி காலம் கழியுமோ

இந்தப் புளுக்களுககு

வடுக்களுக்கு மட்டுமே

தெரியும் இந்தப் புனித உலகின் விழிப்புப் பற்றி

மோதுகின்ற கண்களில் தேடல்கள் தொலைந்து கிடக்கிறது

வாடுகின்ற மனங்களையே கண்களும் காண்பிக்கிறது

எல்லாப் புனிதங்களும் கரையொதுங்கிக் கொள்கிறது

பயனில்லாச் சருகுகளை தேடிக்களைத்துப்போனேன்

என எண்ணிக் தொனித்த குரலில் பாடுகிறது தான்

விரும்பிய பாடலை மனது....................




எத்தனை முறை உலகத்துக்காய் நான் தலை சாய்த்திருக்கிறேன்

என் இலட்சியம் மறந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேன்

அது வெறும் சாரல்கள் போல் எனக்குள் வந்து இடையிடையே

தன் மகிழ்ச்சிகளை என் மீது பொழிவதில் எனக்கு

உடன்பாடல்லை.....


இங்கே வற்றாத குளிர் மேகத்தில் அடைந்து கிடக்கிறேன்

கொஞ்சக்காலம் மனித முகங்களை பார்க்காது....













No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.