Sunday 2 March 2014

என்னைப்போல் உனக்கும்.........


அப்போது உலகமும் 
இந்த உயிர்களும் புதியதுதான்
தவன்று எழும்பி நடக்க தொடங்கிய போது
அவரை வரவழைத்து அதிசயமான
கதைகள் சொல்ல வைத்தார்கள்
நிலாவைப்பற்றி அதிகமாக
பேசினார்.....

                                                           
அவர்........
வீட்டிலே சில காலம் முடங்கிக்கிடந்தார்
நான் பாடசாலைக்கு செனறு கொண்டிருக்கிறேன்
.இப்போது
என்னை அவருடன் பேச அனுமதிப்பதில்லை



பின் ஒரு கால இடை வெளியில் கல்லுரி முடிந்து
வருகிறேன் ..
மாட்டுத் தொழுவத்தருகில் ஒரு கூடாரம்
அவர்... அங்கே முடங்கிக் கிடந்தார்
என்னைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை.....


.....பல காலம் உருண்டொடுகிறது எனக்கும் திருமணமாகியது
எனது குழந்தையும் நடக்கப்
பழகிக் கொள்கிறான் ....
இப்போது
எனது தந்தை நிலாவைப்
பற்றிய கதைகள் மடியில் உட்கார வைத்து
சொல்லிக் கொண்டிருக்கிறார்......

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உங்கள் மொழியின் குளிரில் நனைந்து போனேன் .... அருமை வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிறோசா ...உங்களது விருப்பிற்கு

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.