உன் மென்சலனம் முகமூடி அணிவிக்கிறதுறது
என் துறவறத்தின் மீது
உருக்குலைந்த உயிர்க்கனவை
நீ என் உதிரத்திலே தோய்க்கிறாய்....
நடைப்பிணமாய் என் அனாதையிரவுகளை
சுற்றிச் சுற்றி சுழன்றவனாகிறேன்...
நீ மறந்தாய் என்று உணரும் தேவைகளுக்காய்...
உயிரிலொன்று உடைவதுபோல்
எனக்குள் உருக்குலைக்கிறது
உனது நிழல்...
சிறு குழந்தையின் சுவடுகளாய்
உன் ஓசைகளின் நிழல் அங்கங்கே
என் தனிமைப்பொழுதைக் காத்திரமாக்குகிறது
நீ வெளிர் நதியே ஆனபோதிலும்
என் பசுமைமீது எப்படி ஓட அனுமதித்தேனோ
இதோ இப்போது இந்த வரண்ட தேசம்
அதை அனுமதிக்காதா,.............
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.