Sunday 22 September 2013

மனது...........










கடவுள் விழுமியங்கள்
சிலவற்றையே 
பேணுகிறது..

சுகீரிப்புத் தன்யைின்
சாயலில் பிறக்கும்
பெண்களின் 
மனது............

தனிமைக் காடுகளில்
என் மரக்கன்றுகளை
எனக்கே
தெரியாமல்
அகழ்ந்து
கொண'டிருக்கிறாள்..

பேதமைக்கிரங்கி
புலன் கரைய 
மன எறும்புகளே
அனுமதிக்கின்றன......

சொட்டுமிடைவெளி
தேடாத என் 
கணப்பொழுது
எழுதுவது
அவள் பெயர் மட்டுமே.

விதிச்சருகில்
இப்போது அவள் மூலம்
மூழ்கித் தவிக்கிறேன்
ஒரு இரைச்சலற்ற
காற்றை
எதிர் பார்த்து..

எல்லாத் திசைகளும்
அடைபட்டதாகிறது..
அடைபட்ட இடங்களிலும்
அவள் புன்னகை 
புதைந்து கிடக்கிறது.........








No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.