Saturday, 9 November 2013

என்னில் மோதுகிறாய்


நீ ராசிபார்த்து
என்னில் மோதுகிறாய்...

உன்னில் பட்ட
சினங்கள் எல்லாம்
என்னை கொஞ்சும்

ஓர்நாள்...
என்னுலகம்
உன்னைத் தேடிக்கொண்டு
உன் பகைமையெல்லாம்
என்னை நாடிக்கொண்டு

உறவென்று எதுவும்
இல்லை உன்
பார்வைகளைத் தவிர

போ ..நீ
எனறு சொல்வது ஒரு
போதும் நானாகிப் போகாது

என் உயிரற்ற உடல்
வேணுமென்றால்
எனக்குத் தெரியாமல்
கூறும் தான் உலகை விட்டு
விடுதலை பெறுவதற்காய்